Published : 03 Sep 2017 09:35 AM
Last Updated : 03 Sep 2017 09:35 AM

செப். 12-ல் காவிரி புஷ்கரம் திருவிழா: அனைவரும் காவிரியில் நீராட விஜயேந்திரர் வேண்டுகோள்

செப்டம்பர் 12-ம் தேதி தொடங் கும் காவிரி புஷ்கரம் திருவிழாவில் அனைத்து மக்களும் பங்கேற்று காவிரியில் நீராட வேண்டும் என்று காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ் வதி சுவாமிகள் தெரிவித்தார்.

மயிலாடுதுறை பகுதியில் காவிரி புஷ்கரம் திருவிழா வரும் செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 24-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவானது குருபகவான் ஒவ்வோர் ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்த ராசிக்கு உரிய நதிக்கரையில் நடைபெறும். தற்போது குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு இடம் பெயருவதால் துலாம் ராசிக்கு உரிய காவிரி நதியில் நடைபெறுகிறது.

இந்த விழாவின்போது காவிரியில் பக்தர்கள் நீராடுவதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவிரியில் அனைத்து பகுதிகளிலும் நீராடினாலும் மயிலாடுதுறையில் நீராடுவது சிறப்பு. இப்பகுதியில் உள்ள காவிரி ‘துலாக்கட்ட காவிரி’ என அழைக்கப்படுகிறது.

இந்த விழாவை சங்கர மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைக்கிறார். மயிலாடுதுறையில் 9 நாட்கள் தங்கி நவராத்திரி பூஜைகளும் செய்கிறார். ஆன்மிகச் சொற்பொழிவுகள், நாம சங்கீர்த்தனம், தீர்த்தவாரி உற்சவங்கள் நடைபெறுகின்றன. அனைத்து மக்களும் இதில் பங்கேற்று புண்ணியத்தைப் பெறலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x