Published : 11 Sep 2017 10:25 AM
Last Updated : 11 Sep 2017 10:25 AM
12-ம் வகுப்பு மாணவி 8-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கே.கே.நகர் ஆற்காடு சாலையில் 10 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 8-வது தளத்தில் அருண் மூர்த்தி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது மகள் பிரீத்தி (17). சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தந்தைக்கும், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், விரக்தி அடைந்த பிரீத்தி 8-வது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவி தற்கொலை குறித்து கே.கே.நகர் போலீஸார் கூறியது: பிரீத்தி சரியாக படிக்கவில்லை என அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால், ஏற்பட்ட கருத்து மோதலிலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT