தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப். 24, 25, 26-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப். 27-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப். 23-ம் தேதி (நேற்று) காலை8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி கோமுகி அணையில் 13 செ.மீ., வால்பாறை, மோகனூர் ஆகிய இடங்களில் தலா 6, திருவாரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தலா 4 செ,மீ, மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

9 நகரங்களில் வெயில் சதம்: நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி, மதுரையில் 103, கரூர் பரமத்தி, நாமக்கல்லில் 102, திருத்தணியில் 101, சேலம், ஈரோடு, வேலூர், தஞ்சாவூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in