Published : 14 Sep 2017 09:33 PM
Last Updated : 14 Sep 2017 09:33 PM
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வராமல் தடுக்கும் ஸ்டாலின், திருமாவளவன் போன்றோரை மக்களும், மாணவர்களும் மன்னிக்கவே மாட்டார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வியையும், பள்ளிகளையும் எதிர்க்கும் அளவுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் எதிர்மறை அணுகுமுறையை கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இவர்களை தமிழக இளைய சமுதாயம் மன்னிக்காது.
தலித் குழந்தைகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கிடைப்பதை திருமாவளவன் ஏன் எதிர்க்க வேண்டும்? நவோதயா பள்ளிகளில் எஸ்சி, எஸ்டி வகுப்பினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இடஒதுக்கீடு உண்டு. நவோதயா பள்ளிகளால் மாநில மொழிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. இந்தி திணிப்பு என்று சொல்லி தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வராமல் தடுப்பதை தமிழக மக்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் ஸ்டாலின், திருமாவளவன் போன்றோரை மன்னிக்கவே மாட்டார்கள்'' என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT