2020-21-ல் தமிழகத்தில் ரூ.25,380 கோடி நஷ்டத்தை சந்தித்த 32 பொதுத் துறை நிறுவனங்கள்: சிஏஜி ரிப்போர்ட்

மின்சார வாரியம்
மின்சார வாரியம்
Updated on
1 min read

சென்னை: 2020-21-ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தில் 32 பொதுத் துறை நிறுவனங்கள் ரூ.25,380 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்து கழகம், மின்சார வாரியம் என்று 63 பொதுத் துறை நிறுவனங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே லாபத்தில் இயங்கி வருகிறது. இதன்படி 2016-17-ம் ஆண்டில் தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் ரூ.8,378 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்தன. இதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த நஷ்டம் அதிகரித்துக் கொண்டுள்ளது.

2020-21-ம் ஆண்டில் ரூ.24,123 கோடி நஷ்டத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 2020-21-ம் ஆண்டில் மட்டும் 63 பொதுத் துறை நிறுவனங்களில் 29 நிறுவனங்கள் ரூ.1256 கோடி லாபத்தை ஈட்டியுள்ளன. 32 நிறுவனங்கள் ரூ.25,380 கோடி நஷ்டத்தில் இயங்கியதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in