Published : 21 Apr 2023 06:41 AM
Last Updated : 21 Apr 2023 06:41 AM

அண்ணாமலை மீது நடவடிக்கை: மத்திய நிதி அமைச்சருக்கு திமுக எம்பி கலாநிதி கடிதம்

சென்னை

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் நண்பர்களிடம் இருந்து மாதம் ரூ.8 லட்சம் வரை அவரது குடும்ப செலவுகள், வீட்டுசெலவுகளுக்காகவும், உதவியாளர்களுக்கான சம்பளத்துக்காகவும் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இவ்வாறாக ரூ.1.76 கோடி வாங்கியுள்ளதாக தெரிகிறது.

மேலும், ரபேல் கடிகாரத்தை ரூ.3 லட்சத்துக்கு சேரலாதன் ராமகிருஷ்ணனிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளார். வருமானவரிச்சட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் பணமாக கொடுப்பதும்,வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் அவர் மீது வருமான வரிச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x