Published : 06 Sep 2017 12:57 PM
Last Updated : 06 Sep 2017 12:57 PM
வலதுசாரி அமைப்புகளால் இந்திய பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிர்ச்சியளிப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''சமூக ஆர்வலரும், பத்திரிகை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கவுரி லங்கேஷ் அவர்களின் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். வலதுசாரி அமைப்புகளால் இந்திய பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
கொலைகாரர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT