Published : 08 Sep 2017 08:40 PM
Last Updated : 08 Sep 2017 08:40 PM
தமிழகம், புதுச்சேரியில் இன்று பரவலாக மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய மஹாராஷ்டிரா முதல் தென் தமிழகம் இடையே, உள் தமிழகம் வழியாக புதிய காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT