Published : 27 Sep 2017 08:25 AM
Last Updated : 27 Sep 2017 08:25 AM
தண்டையார்பேட்டையில் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை போலீஸார் மீட்டனர்.
சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ் (33). இவரது மனைவி பர்கத் நிஷா(27). இவர்களின் இரண்டரை வயது ஆண் குழந்தை முகமது ஷாது. நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த முகமது ஷாது, திடீரென காணாமல் போனான். இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீஸார் விசாரித்து வந்தனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் ஆய்வுசெய்தபோது, 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் குழந்தையை சைக்கிளில் வைத்து கடத்திச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதைவைத்து விசாரணை நடத்திய போலீஸார், நேற்று மாலை ஆர்.கே.நகரில் குழந்தையை மீட்டனர். குழந்தையை கடத்திய நபரையும் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT