Published : 05 Sep 2017 02:57 PM
Last Updated : 05 Sep 2017 02:57 PM
எடப்பாடி அணியுடன் எந்தக் காரணத்தைக் கொண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டசெயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்தக் கூட்டமும் செல்லாது, பொதுக்குழு கூட்டமும் செல்லாது. தற்போது நடக்கும் பிரச்சினை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையை தினகரன் முடிவு செய்வார். 19 எம்.எல்.ஏக்கள் மீது விளக்கம் கேட்கும் நோட்டீஸ் குறித்து விளக்கமளிக்க 4 எம்எல்ஏக்கள் மட்டுமே சபாநாயகரை சந்திப்பார்கள். தற்போது 'ஸ்லீப்பர் செல்களை'யும் சேர்த்து தினகரனிடம், 35 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
பெரும்பான்மை இருந்தால் சட்டசபையில் முதல்வர் நிரூபிக்க வேண்டியது தானே. முதல்வர் தலைமையில் நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டம் செல்லாது.
மாணவி அனிதா குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஏன் செல்லவில்லை. மாணவி மரணத்திற்கு தமிழக அரசே காரணம். எடப்பாடி அணியுடன் எந்த சமாதான பேச்சுவார்த்தையும் நடத்த மாட்டோம்'' என்று வெற்றிவேல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT