Published : 18 Sep 2017 06:00 AM
Last Updated : 18 Sep 2017 06:00 AM
அரசுப் பேருந்தில் குழந்தைக்கு பயணச்சீட்டு பெறச் சொன்ன நடத்துநரைத் தாக்கிய பெண் காவலரை, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
குரோம்பேட்டை பேருந்து நிறுத்தத்துக்கு அரசு மினி பேருந்து ஒன்று நேற்று மதியம் சென்றது. அதில் நடத்துநர் விஜயகுமார் பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பேருந்தில் லட்சுமிபுரத்தில், வித்யா என்ற பெண், குழந்தையுடன் ஏறியுள்ளார். அப்போது வித்யா மட்டும் பயணச்சீட்டு எடுத்தார். அப்போது நடத்துநர் வித்யாவிடம் குழந்தைக்கும் சேர்ந்து பயணச்சீட்டு எடுக்கும்படி கூறினார். அதற்கு அவர் குழந்தைக்கு மூன்று வயதுதான் ஆகிறது என்று கூறி பயணச்சீட்டு எடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வித்யா, நடத்துநர் விஜயகுமாரைக் கண்ணத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து குரோம்பேட்டை போலீஸில் நடத்துநர் விஜயகுமார் புகார் அளித்தார். இதுகுறித்து குரோம்பேட்டை விசாரித்து வருகின்றனர். விசாரணையில் வித்யா கிண்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருவது தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT