Published : 17 Sep 2017 07:45 PM
Last Updated : 17 Sep 2017 07:45 PM

பாஜகவுக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பின் முன்னோட்டம்தான் ஹெச்.ராஜாவின் தோல்வி: ஜி.ராமகிருஷ்ணன்

தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு அளிக்கும் தீர்ப்பின் முன்னோட்டம் தான் சாரணர் இயக்கத் தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா தோல்வியடைந்தது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மதுரையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சாரணர் படை தேர்தலில் போட்டியிட்ட எச்.ராஜாவுக்கு வாக்களிக்க வேண்டுமென அமைச்சர்கள் அறிவித்தும் கூட அவர் படுதோல்வியை சந்தித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் காவி கூட்டத்துக்கு அளிக்கும் தீர்ப்பின் முன்னோட்டம் தான் இது.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. உள்ளாட்சி தேர்தலை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி அரசு சட்டமன்றத்தில் தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x