Published : 13 Sep 2017 07:44 AM
Last Updated : 13 Sep 2017 07:44 AM

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி சென்னையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் இருந்து தமிழக அரசின் இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நிரந்தர விலக்கு வழங்க வலியுறுத்தி சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு அனைத்து டாக்டர்கள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் ஜி.ரமேஷ், டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், “தமிழக அரசின் ஒதுக்கீட்டு இளநிலை,முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வழங்க வேண்டும். இந்த ஆண்டு தமிழகத்தில் கூடுதலாக 2,600 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை செப்டம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும். ஆந்திரா, தெலங்கானாவில் உள்ளது போல், தமிழக அரசின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழக மாணவர்களுக்கே வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x