ரூ.15 கோடியை வைப்பீடாக செலுத்தும் வரை நடிகர் விஷாலின் பட நிறுவனம் புதிய படங்கள் வெளியிட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

ரூ.15 கோடியை வைப்பீடாக செலுத்தும் வரை நடிகர் விஷாலின் பட நிறுவனம் புதிய படங்கள் வெளியிட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை நிரந்தரவைப்பீடாக உயர் நீதிமன்றத்தில் செலுத்தும் வரை நடிகர் விஷாலின் பட நிறுவனம் எந்த புதிய படங்களையும் வெளியிடக் கூடாதுஎன உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நடிகர் விஷால் தனது தயாரிப்புநிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்துரூ.21.29 கோடியை கடனாகப் பெற்றிருந்தார். இத்தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு அன்புச்செழியனுக்கு செலுத்தியது.

இதுதொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், இந்த கடன் தொகையை முழுவதுமாக திருப்பிச் செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடியை வழங்காமல் ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடவும், அதன் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதம் விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ரூ.15 கோடியை நடிகர் விஷால் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் 3 வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து விஷால்செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘தனி நீதிபதியின்உத்தரவுப்படி ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்தும் வரை விஷாலின் பட நிறுவனம்தயாரிக்கும் அல்லது நிதியுதவிசெய்யும் எந்த புதிய படங்களையும், எந்த தளங்களிலும் வெளியிடக்கூடாது’’ என்று இடைக்கால தடை விதித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in