Published : 03 Apr 2023 03:02 PM
Last Updated : 03 Apr 2023 03:02 PM

பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு: ஏப்.10 முதல் விடைத்தாள் திருத்தும் பணி

கோவையில் தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் வெளியே வந்த மாணவிகள் | படம்: ஜெ.மனோகரன்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்றுவந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.3) நிறைவு பெற்றது. வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். கடந்த 3 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.3) நிறைவு பெற்றது. இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெற்றன. பொதுத்தேர்வு முடிந்ததைத் தொடர்ந்து பெரும்பாலான பள்ளிகளில் இன்று பிரிவு உபசார விழாக்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.10 முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகளை மே 5-ம் தேதி வெளியிட பள்ளிக் கல்விதுறை முடிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x