Published : 22 Sep 2017 08:09 AM
Last Updated : 22 Sep 2017 08:09 AM
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தெற்கு ஆந்திர பிரதேசம் மற்றும் தென் தமிழகம் இடையே, கடலோர தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. அதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT