Published : 06 Sep 2017 10:59 AM
Last Updated : 06 Sep 2017 10:59 AM
ஊழலற்ற மோடி அரசை மோசடி ஆட்சி என்று சொல்கின்றனர் ஊழலில் திளைத்த சர்க்காரியா புகழ் 2ஜி ஊழல் விஞ்ஞானிகள் என்று தமிழிசை சவுந்தரராஜன் எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த முரசொலி பவளவிழாவில் திமுக செயல் தலைவரும், தமிழக எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசும்போது, "மத்தியில் ஆளும் மோடியின் ஆட்சி மோசடி ஆட்சி "என்று கூறியிருந்தார்.
ஸ்டாலினின் இந்த பேச்சை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில்,
”ஊழலற்ற மோடி அரசை மோசடி ஆட்சி என்று சொல்வது ஊழலில் திளைத்த சர்க்காரியா புகழ் 2ஜி ஊழல் விஞ்ஞானிகள்” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT