

சென்னை: மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்டச் சாலையில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 60 கிலோமீட்டர் தூர வெளிவட்ட சாலையானது ரூ.2,156 கோடி மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த சாலையில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 20 இடங்களில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வண்டலூர் முதல் நசரத் பேட்டை வரை, நசரத் பேட்டை முதல் வண்டலூர் வரை, வண்டலூர் முதல் நெமிலிச்சேரி வரை, நெமிலிச்சேரி வரை வண்டலூர் வரை, வண்டலூர் முதல் பாடியநல்லூர் வரை, பாடியநல்லூர் வரை வண்டலூர் வரை, வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை, மீஞ்சூர் முதல் வரை வண்டலூர் வரை, நசரத் பேட்டை முதல் நெமிலிச்சேரி வரை, நெமிலிச்சேரி வரை நசரத் பேட்டை முதல் உள்ளிட்ட இடங்களில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் நசரத் பேட்டை முதல் பாடியநல்லூர் வரை, பாடியநல்லூர் முதல் நசரத் பேட்டை வரை, நசரத் பேட்டை முதல் மீஞ்சூர் வரை, மீஞ்சூர் முதல் நசரத் பேட்டை வரை, நெமிலிச்சேரி முதல் பாடியநல்லூர் வரை, பாடியநல்லூர் முதல் நெமிலிச்சேரி வரை, நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை, மீஞ்சூர் முதல் நெமிலிச்சேரி வரை, பாடியநல்லூர் முதல் மீஞ்சூர் வரை, மீஞ்சூர் முதல் பாடியநல்லூர் என மொத்தம் 20 இடங்களில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.