

சென்னை: சென்னை மாநகராட்சி குடிநீர் தேவைக்கு ரூ.44 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார், தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 29) நீர்வளத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிவிப்புகளின் விவரம்: