இலங்கையில் இருந்து 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

இலங்கையில் இருந்து 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்கள் 8 பேர், மெரைன் போலீஸாரின் விசாரணைக்குப் பின் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடந்த ஆண்டு மார்ச் முதல் இதுவரை இலங்கை தமிழர்கள் 225 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தைச் சேர்ந்த சசிக்குமார் (47), அவரது மனைவி உமாதேவி (42) அவரது இரு மகள்கள், பார்வதி (70), மகேந்திரா (50) என்பவர் உட்பட 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் நேற்று முன்தினம் இரவு தலைமன்னாரில் பைபர் படகு மூலம் புறப்பட்டனர். தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடைப் பகுதியில் நேற்று அதிகாலை வந்திறங்கினர்.

தகவலறிந்த மெரைன் போலீஸார் மணல் தீடையிலிருந்த இலங்கைத் தமிழர்கள் 8 பேரை ஹோவர் கிராஃப்ட் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்குக் கொண்டு வந்தனர்.

பின்னர் மெரைன் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைக்குப் பின் 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in