Published : 16 Sep 2017 10:29 AM
Last Updated : 16 Sep 2017 10:29 AM

திருச்சியில் வரும் 19-ம் தேதி தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சி உழவர் சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடத்த டிடிவி தினகரனுக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக அம்மா அணியின் திருச்சி மாவட்ட செயலர் ஸ்ரீனிவாசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக செப். 19-ம் தேதி திருச்சி உழவர் சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்தோம். ஆனால் இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே உழவர் சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியும், பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. உழவர் சந்தை திடலில் மராமத்து பணிகள் நடைபெறுவதால் அனுமதி வழங்க முடியாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்க மறுத்த நீதிபதி, உழவர் சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடத்த பல்வேறு கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மனுதாரர் கட்சிக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

பின்னர் தினகரன் தலைமையில் திருச்சி உழவர் சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி, மாநகராட்சி பிறப்பிக்கும் நிபந்தனைகளை பின்பற்றி சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாதவாறு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். தேவைப்பட்டால் போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x