Published : 19 Mar 2023 03:08 PM
Last Updated : 19 Mar 2023 03:08 PM

கும்பகோணம் | கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

கும்பகோணம்: கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவிடைமருதூர் வட்டம், கோயில்ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பவுனம்மாள் (60). இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். இவரது இரண்டு மகன்களில் ஒருவருக்கு திருமணமாகி அவர் தனியாக வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான மற்றொரு மகனுடன் பவுனம்மாள் வசித்து வந்துள்ளார்.

நேற்று இப்பகுதியில் கன மழை பெய்துள்ளது. இந்நிலையில் இன்று காலையில் பவுனம்மாள் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, அவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த பந்தல்லூர் போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x