பாபநாசம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவி தீக்குளித்து படுகாயம்

பாபநாசம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவி தீக்குளித்து படுகாயம்
Updated on
1 min read

கும்பகோணம்: பாபநாசம் வட்டம், கீழக் கபிஸ்தலம், முதலியார் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி சுமதி(50).இவர் திமுக ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சுமதி, அண்மைக்காலமாக குடும்ப பிரச்சினையினால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை, தனது வீட்டில் உள்ள அறையில் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் சுமதியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து கபிஸ்தலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in