ராமேசுவரம் | 16 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு

ராமேசுவரம் | 16 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு

Published on

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, கடலுக்குச் சென்ற அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை, கடந்த 11-ம் தேதி நள்ளிரவு நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

இந்நிலையில், பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை மார்ச் 17 வரை காவலில் வைக்க நீதிபதி பொன்னுதுரை கிருஷாந்தன் உத்தரவிட்டார்.

அதேபோல, கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை மார்ச் 24 வரைகாவலில் வைக்க ஊர்க்காவல் துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டார். 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in