‘இந்தியன் 2’ படப்பிடிப்பு குழுவினருடன் கிராம மக்கள் வாக்குவாதம்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு குழுவினருடன் கிராம மக்கள் வாக்குவாதம்
Updated on
1 min read

செங்கல்பட்டு: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு ஆந்திரா, திருப்பதி என நடைபெற்று வந்தது.

இதன் தொடர்ச்சியாக கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் டச்சுக் கோட்டையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இறுதி நாள் படப்பிடிப்பு என்பதால் கிராம மக்கள் சார்பில் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு படப்பிடிப்பு குழுவினரிடம் நன்கொடை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் படப்பிடிப்பு குழுவினருக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கோட்டை நுழைவு வாயிலை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in