Published : 02 Jul 2014 08:34 AM
Last Updated : 02 Jul 2014 08:34 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து - 70 வீடுகள் விற்பனை.. பணம் திரும்பக் கிடைக்குமா?

இடிந்து விழுந்த 11 மாடி கட்டிடத்தில் மொத்தம் 86 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதில் 70 -க்கும் அதிகமான வீடுகள் விற்பனையானதாக கூறப்படுகிறது. அவை ரூ.52 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. வீடு வாங்கிய அனைவரும் கட்டிட உரிமையாளர் மனோகரனிடம் 90 சதவீத பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பணம் திரும்ப கிடைக்குமா? என்பதே அவர்களின் முதல் கேள்வி.

வீடு வாங்க பணம் கொடுத்த அனைவருக்கும் அந்த கட்டிடம் கட்டப்பட்ட நிலம் அவரவர் பெயரில் எழுதி பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் கூட்டாக சேர்ந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி நீதிமன்றத்தை அணுகலாம். ஆனால் பணம் திரும்பக் கிடைக்க குறைந்தது ஓராண்டாவது ஆகும் என்று கூறப்படுகிறது. மீட்புப்பணிகள் முடிந்த பிறகே இதுபற்றி தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x