Published : 25 Sep 2017 10:07 AM
Last Updated : 25 Sep 2017 10:07 AM

ஷீரடி சாய்பாபாவின் 99-வது மகா சமாதி தினம்: மயிலாப்பூரில் வரும் 30-ம் தேதி அனுசரிப்பு

மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் சீரடி சாய் பாபாவின் 99-வது மகா சமாதி தினம் வரும் 30-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

சீரடி சாய்பாபா, விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். அதனால் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 99-வது சமாதி தினம், விஜயதசமி தினமான வரும் 30-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.

அதை முன்னிட்டு மயிலாப்பூர், அலுமேலுமங்காபுரம் பகுதியில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் (அகில இந்திய சாய் சமாஜம்), வரும் 30-ம் தேதி காலையில் இருந்து சிறப்பு ஹோமங்களும், விசேஷ அபிஷேகங்களும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற உள்ளன. அதன் தொடர்ச்சியாக அகில இந்திய சாய் சமாஜம் பஜனை குழுவின் சிறப்பு பஜனையும் நடைபெறுகிறது. பின்னர் சிறப்பு அலங்காரமும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.

மாலை 3 மணிக்கு, மவுல்வி மொஹைதீன் சாஹுல் அமீது பங்கேற்று, திருக்குரான் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார். அதன் பின்னர், அனைத்து மாடவீதிகள் வழியாகவும் சாய்பாபாவின் ஊர்வலம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை சமாஜத்தின் செயலர் கே.தங்கராஜ், பொருளாளர் ஏ.செல்வராஜ், குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x