

சென்னை: சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க செயல்படுத்திய 5 பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பேச்சு விளக்கம் அளித்தார்.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் சார்பில், நகர்ப்புற வெள்ள பாதிப்பு தடுப்பு குறித்த பயிலரங்கம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களின் ஆணையர்கள், ஐ.ஐ.டி நிபுணர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஒவ்வொரு பெருநகரங்களிலும், வெள்ள பாதிப்பு தடுப்பது குறித்து, அந்தந்த நிர்வாகங்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.
இதில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது: சென்னையில் வருங்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஐந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இந்தத் திட்டங்கள் வாயிலாக, வரும் காலங்களில் மழை வெள்ள பாதிப்பு குறைக்கப்படும்” என்று அவர் பேசினார்.