Published : 09 Sep 2017 06:11 PM
Last Updated : 09 Sep 2017 06:11 PM
வேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மேடையில் முதல்வர் பழனிசாமி பேசும்போது மின்கசிவு ஏற்பட்டதால் லேசான தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் சலசலப்பு இருந்தது.
வேலூர் கோட்டை மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது முதல்வர் பழனிசாமி பேசும்போது மின்கசிவு ஏற்பட்டது. இதனால் தொண்டர்கள் எழுந்து செல்ல முயன்றனர். உடனே முதல்வர் பழனிசாமி தொண்டர்களை அமைதிப்படுத்தி பேச்சைத் தொடர்ந்தார்.
மின்கசிவு காரணமாக லேசான தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தீ விபத்தை தவிர்ப்பதற்காக தீயணைப்பான் பயன்படுத்தப்பட்டது. இதனால் வேலூர் கோட்டை மைதானம் சிறிது நேரம் புகைமூட்டமாக காட்சியளித்தது. இந்த புகைமூட்டத்துக்கு இடையிலும் முதல்வர் பழனிசாமி தொடர்ந்து பேசினார். அப்போது மேடையில் இருந்த எல்.இ.டி திரை மட்டும் அணைத்து வைக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் சலசலப்பு இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT