Published : 28 Sep 2017 08:05 AM
Last Updated : 28 Sep 2017 08:05 AM
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு வரும் 4-ம் தேதி ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
2006-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ. 5,000 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறுவதற்காக, ‘அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங்’ நிறுவனம் உதவி செய்துள்ளது. இதற்காக இந்த நிறுவனத்துக்கு ஒரு தொகை கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகிறது.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு குறித்த விசாரணைக்கு வருகிற 4-ம் தேதி டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT