Published : 10 May 2017 08:49 AM
Last Updated : 10 May 2017 08:49 AM
சமக தலைவர் சரத்குமாரின் வீடு, அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா அலுவலகங்களில் ஏப்ரல் 11-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக நேற்றும் மாலை 4 மணியளவில் வருமான வரித்துறை அலுவலகத்தில் சரத்குமார் நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சரத்குமாரிடம் மட்டும் 5-வது முறையாக விசாரணை நடந்து வருகிறது.
அதற்கான காரணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளோ, சரத்குமாரோ இன்னும் வெளிப்படையாக தெரி விக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT