Published : 02 May 2017 08:02 AM
Last Updated : 02 May 2017 08:02 AM

மே தினத்தன்று செயல்பட்ட காசோலை பரிவர்த்தனை மையம்: அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தமிழக பிரிவு சார்பில் சென்னை ரிசர்வ் வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் அகில இந்திய மூத்த துணைத் தலைவர் தாமஸ் பிராங்கோ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலாளர் சேகர், தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தாமஸ் பிராங்கோ, ‘‘தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், காசோலை பரிவர்த்தனை மையம் மட்டும் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி ரிசர்வ் வங்கி பொதுமேலாளரிடம் ஏற்கெனவே கடிதம் அளித்தோம். ஆனால், எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். ரிசர்வ் வங்கி உத்தரவால் வங்கிகளின் காசோலை பரிவர்த்தனை மையங்களில் பணிபுரியும் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் செயல்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x