மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது தாய்மொழி: கமல்ஹாசன்

கமல்ஹாசன் | கோப்புப் படம்
கமல்ஹாசன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது தாய்மொழி என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு மநீம தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரது தாய்மொழியேயாம். எத்தனை மொழிகளும் தத்தம் விருப்பத்தில் கற்றுக்கொள்ளலாம். அத்தனையிலும் அன்னை போல் இருப்பதால்தான் ஒரு மொழிக்கு மாத்திரம் தாய்மொழி என்று பேர். சிந்திப்பதை சொல்லில் வெளிப்படுத்தும் அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்,

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in