Published : 05 Jul 2014 09:08 AM
Last Updated : 05 Jul 2014 09:08 AM
இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேரைக் காணவில்லை.
இதுகுறித்து தேடுதல் மற்றும் மீட்புக் குழு தலைவர் மர்சுதி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் உள்ள டகூவோ கிராமத்துக்கு அருகே உள்ள தங்கச் சுரங்கத்தில் புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் உயிருடனும் 9 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரைக் காணவில்லை. என அவர் தெரிவித்தார்.
சமீப காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால், இந்தோ னேசியாவில் தங்கச் சுரங்கங்களில் சட்டவிரோதமாக தங்கம் எடுப்பது அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT