

ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டிய சூழல் உள்ளது. எங்கள் அணியில் 95% பேர் உள்ளனர். ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருக்கிறோம்.
அரசியல் காரணங்களுக்காகவே அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.