Published : 25 May 2017 08:23 PM
Last Updated : 25 May 2017 08:23 PM

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது ஏன்?- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதே தமிழகத்தின் வ‌ளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவதற்காகத்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள மீன் மற்றும் மீன் உணவுகளை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் வசதியை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்துப் பேசினார்.

அப்போது மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு செயல்படுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ''மாநில அரசின் உரிமைகளில் எள் அளவும் பின்வாங்கவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதே தமிழகத்தின் வ‌ளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவதற்காகத்தான்'' என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x