

கொடநாடு காவலாளி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படாது என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 19 வயதுக்கு உட்பட் டோருக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டி நேற்று நடந்தது. அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கொடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கு விசா ரணை சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. கொலை செய்தவர்களை கைதும் செய்துள் ளனர். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.