Published : 26 May 2017 09:13 AM
Last Updated : 26 May 2017 09:13 AM

பிளஸ் 2 துணைத்தேர்வு அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், விண்ணப்பித்து விட்டு தேர்வில் கலந்துகொள்ளாத வர்கள் ஆகியோருக்காக ஜுன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வு ஜுன் 23-ம் தேதி தொடங்கி ஜூலை 6-ம் தேதி முடிவடையும்.

சிறப்பு துணைத்தேர்வு எழுத விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங் கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர் வெழுதிய தேர்வு மையங்கள் வழி யாகவும் நேரில் சென்று மே 29 முதல் ஜுன் 1-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தனியார் கணினி மையங்கள் (Browsing Centre) மூலம் விண்ணப்பிக்க இயலாது. தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணமாக ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 ஆகியவற்றை சேர்த்து பணமாக செலுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x