Last Updated : 31 May, 2017 01:32 PM

 

Published : 31 May 2017 01:32 PM
Last Updated : 31 May 2017 01:32 PM

சென்னை காவலர் குடியிருப்பில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

போலீஸார் வந்து சமாதானப்படுத்திய பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

ஐஸ்ஹவுஸ் டி3 காவலர் குடியிருப்பில் கடந்த 4 நாட்களாகத் தண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து காவல்துறையினரின் மனைவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் வந்து, காவலர்களின் மனைவிகளே இப்படிச் செய்தால் நாங்கள் என்ன செய்வது என்று கேள்விகள் எழுப்பினர். போலீஸாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பெண்கள் கலைந்துசென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x