

சென்னை: அண்ணாசாலை விபத்து எதிரொலியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகு கட்டிடங்களை இடிக்க அனுமதி அளிக்க வேண்டும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் சென்னை அண்ணா சாலையின் ஆயிரம் விளக்குப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சுரங்கப் பாதைக்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணியின் போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரியா என்ற பெண் மீது கட்டிட இடுபாடுகள் விழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், அருகில் இருந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து கட்டிட இடுபாடுகளுக்குள் சிக்கிய பிரியாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி பிரியா உயிரிழந்தார்.
இது தொடர்பாக பேசிய மேயர் பிரியா, "இனிவரும் காலங்களில் கட்டிடம் இடிக்கும்போது மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை நேரில் ஆய்வு செய்வார்கள்” என்று தெரிவித்தார். இதன்படி, இது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அனைத்து பொறியியல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். இதன் விவரம்: