Published : 13 May 2017 09:11 AM
Last Updated : 13 May 2017 09:11 AM

ரேங்க் முறை மாற்றத்தால் கல்வித் தரம் உயராது: மு.க.ஸ்டாலின் கருத்து

ரேங்க் முறை மாற்றத்தால் கல்வித்தரம் உயராது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த ஸ்டாலின், அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

பிளஸ் 2 தேர்வில் ரேங்க் முறை கைவிடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதே?

ரேங்க் முறை மாற்றத்தால் கல்வி யின் தரத்தை உயர்த்த முடியாது. இது ஒரு அறிவிப்பாக இருக்க லாமே தவிர, சாதனையாக இருக்க முடியாது. என்னைப் பொறுத்த வரை கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் தரத்தை உயர்த் தும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்றால் உள்ளபடியே அது பாராட் டுக்குரியது. அந்தப் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அரசுப் பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளார்களே?

நூறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும் மாணவர்களுக் கும் பாராட்டு, வாழ்த்துகளை தெரி வித்துக் கொள்கிறேன். படிப்பவர் களின் தரம் வேண்டுமானால் உயர்ந்திருக்கலாம். கல்வித்தரம் உயர்ந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை.

‘பாஜக ஒரு மதவாத கட்சி என்பது இப்போதுதான் திமுகவுக்குத் தெரிகிறதா, எங்களுடைய ஆட்சியில் அமைச்சரவையில் இருந்தபோது தெரியவில்லையா’ என்று அக்கட்சி யினர் கேட்கிறார்களே?

அப்படி கேட்பது பொன்.ராதா கிருஷ்ணனாக இருந்தாலும் தமிழிசையாக இருந்தாலும், அவர்களின் விளம்பரத்துக்காக கருணாநிதி சட்டப்பேரவை வைர விழாவை பயன்படுத்துவதற்கு நான் உடந்தையாக இருக்க விரும்பவில்லை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x