Published : 31 May 2017 03:13 PM
Last Updated : 31 May 2017 03:13 PM
அதிமுக அரசு தினம் தினம் செத்துப் பிழைக்கிறது என்று மாநிலங்களவையின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
மிருக வதை தடைச் சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.ரங்கராஜன், ''கால்நடைகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக தனது நிலைப்பாட்டைப் பதிவு செய்ய தமிழக அரசு அஞ்சுகிறது. அதிமுக மிகப் பெரிய சிக்கலில் இருப்பதால் தினம் தினம் செத்துப் பிழைக்கிறது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT