Published : 02 May 2017 09:33 AM
Last Updated : 02 May 2017 09:33 AM
சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் (ஜி.எஸ்.டி.) பூஜை பொருட் களை தவிர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இஞ்சி, பூண்டு உள்ளிட்ட பொருட்களுக்கு கூட வரி விதித்துள்ளனர். இதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஏற்றுக்கொள்ளாது என்று இவ் வமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு சார்பாக வருகிற 5-ம் தேதி விழுப்புரத்தில் இந்திய வணிக வளர்ச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் 10 லட் சம் வணிகர்கள் பங்கேற்கின்றனர்.
வங்கிகள் ஒரு சேவை மனப் பான்மையுடன் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமை மாறி கந்துவட்டிக்காரர்கள்போல் செயல்படுகின்றனர். வங்கிகளின் செயல்பாட்டை கண்டித்து தமிழ கம் முழுவதும் வருகிற 5-ம் தேதி வங்கி புறக்கணிப்பில் வணிகர்கள் ஈடுபடுகின்றனர்.
இதுவரை மக்கள் பயன்படுத் தும் 591 பொருட்களுக்கு வரி இல்லாமல் இருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் (ஜி.எஸ்.டி.) பூஜை பொருட்களை தவிர மக்கள் அன்றாடம் பயன் படுத்தும் இஞ்சி, பூண்டு உள்ளிட்ட பொருட்களுக்கு கூட வரி விதித் துள்ளனர். இதை தமிழ்நாடு வணி கர் சங்கங்களின் பேரமைப்பு ஏற்றுக் கொள்ளாது. சாமானிய மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார் கள். அதை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். இதுகுறித்து டெல்லி சென்று நிதி அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம்.
பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மூடப் படும் என்று அறிவித்துள்ளனர். அதை மூடக்கூடாது என மத்திய அரசு நிர்பந்திக்கக்கூடாது. அது போல் புதுச்சேரி உள்ளிட்ட சில நகரங்களில் பெட்ரோல் - டீசல் விற்பனையில் தினசரி விலை மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வருவதால் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். இதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT