நாமக்கல் | தேசியகீதத்துக்கு மரியாதை அளிக்காத எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

நாமக்கல் | தேசியகீதத்துக்கு மரியாதை அளிக்காத எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல்லை அடுத்த பொம்மை குட்டை மேட்டில் கடந்த 28-ம் தேதி நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றார். இங்கு ஏராளமான போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா நிறைவில் தேசியகீதம் பாடப்பட்டபோது விழா பந்தலின் கடைசி பகுதியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம், எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல், இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனை அடுத்து தேசிய கீதத்துக்கு மரியாதை அளிக்காத சிறப்பு உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து நாமக்கல் எஸ்.பி. கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in