வங்கக்கடலில் புயல் சின்னம்: மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ராமேசுவரம்: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இலங்கை கடற்கரை பகுதிகளைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது, என வானிலை மையம் அறிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா, குமரி கடல், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் அதிகபட்சமாக 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடல் மற்றும் குமரி கடல் பகுதியில் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்.

மீனவர்கள் கடல் சீற்றத்தி லிருந்து தங்களின் படகுகளைத் தற்காத்துக்கொள்ள பாதுகாப்பாக நிறுத்தவும், ராமநாபுரம் மாவட்ட மீன்வளத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக பாம்பன் துறைமுகத்தில் ஜன.30-ம் தேதி ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in