Published : 08 May 2017 09:49 AM
Last Updated : 08 May 2017 09:49 AM

50 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி ஜெயலலிதா நினைவிடத்தில் அரசு டாக்டர்கள் பிரார்த்தனை: இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு

மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மெரினா கடற் கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அரசு டாக்டர்கள் பிரார்த்தனை செய்தனர்.

அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மருத்து வர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) நேற்று நடந்தது. மருத்துவ இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசு டாக்டர்களுக்கு மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை திரும்ப கொடுக்க வேண்டும். பாதிக்கப் பட்ட டாக்டர்கள் ஒவ்வொரு வருக்கும் ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இந்நிலையில், சங்கத்தின் சார்பில் 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் நேற்று இரவு 7.30 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர்.

கோரிக்கைகளை வலி யுறுத்தி இன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடை பெறும் மருத்துவப் பட்ட மேற் படிப்பு கலந்தாய்வு நடக்கும் அறை முன்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதேபோல் தமிழ்நாடு மருத்துவ அலு வலர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் சென்னை தேனாம் பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், இன்று நடைபெறும் மருத்துவ பட்ட மேற்படிப்பு கலந்தாய்வு நடை பெறும் இடத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x