

சென்னை: போட் கிளப் மெட்ரோ ரயில் பணிகள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலையில் மேற்கொள்ள இருப்பதால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு 01.02.2023 முதல் 07.02.2023 வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்: போட் கிளப் மெட்ரோ ரயில் பணிகள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலையில் மேற்கொள்ள இருப்பதால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு 01.02.2023 முதல் 07.02.2023 வரை சோதனை அடிப்படை அடிப்படையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.