Published : 30 Jan 2023 01:37 PM
Last Updated : 30 Jan 2023 01:37 PM

ஆளுநருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் குறித்து சட்ட ஆலோசனை பெறப்படும்: சென்னை மேயர் பிரியா

மதிமுக கவுன்சிலர் ஜீவன்

சென்னை: ஆளுநருக்கு எதிராக சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய மதிமுக மாமன்ற உறுப்பினர் ஜீவன், "தமிழ்நாடு என்ற பெயரை ஆளுநர் சட்டமன்றத்தில் பேச மறுத்தது கண்டனத்து உரியது. அண்ணா, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோரின் பெயரை உள்நோக்கத்துடன் சொல்லாமல் இருந்திருக்கிறார் ஆளுநர்.

சென்னை மாநகராட்சி சார்பில் ஆளுநருக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை மேயர் கொண்டு வர வேண்டும். பகுத்தறிவு மண்ணை சீண்டிப் பார்க்கும் எண்ணம் இனி எந்த ஆளுநருக்கும் தமிழ்நாட்டில் வராத வகையில் கண்டனத் தீர்மானத்தை மேயர் நிறைவேற்ற வேண்டும்" என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, "சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு, ஆளுநருக்கு எதிராக மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x