Published : 29 Jan 2023 04:45 PM
Last Updated : 29 Jan 2023 04:45 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக எளிதாக வெற்றி பெறும்: செங்கோட்டையன் நம்பிக்கை

செங்கோட்டையன் | கோப்புப்படம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக எளிதாக வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான செங்கோட்டையன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த தேர்தல் என்பது செங்கோட்டையில் வைக்கத்தக்க அளவிற்கு எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க இருக்கிறது.

ஏனென்றால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லுக்குப் பிறகுதான், நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. இந்த குரல் டெல்லி செங்கோட்டையில் ஒலிக்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவின் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் எந்தவிதமான தடையும் இல்லை. பிரச்சாரத்தைப் பொறுத்தவரை, அதிமுக மகா கூட்டணியோடு இணைந்து அந்தப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது" என்றார்.

அப்போது அதிமுக கூட்டணியில், தமாக மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், "இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் அறிக்கை வெளியிடுவார்." என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x