பாலம் கட்டும் பணி காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் 

போக்குவரத்து மாற்றம்
போக்குவரத்து மாற்றம்
Updated on
1 min read

சென்னை: பாலம் கட்டுமான பணி காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை 2-வது தெருவில் ஆஸ்பிரின் கார்டன் முதல் தெரு சந்திப்பு அருகில் உள்ள பழைய பாலம் இடிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்க உள்ளது. இதன் காரணமாக நாளை (ஜன. 30 ) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன் விவரம்:

  • கீழ்ப்பாக்கம் கார்டன் இரண்டாவது சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
  • நியு ஆவடி சாலையிலிருந்து கீழ்ப்பாக்கம் 2-வது தெரு வழியாக கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள், ஆஸ்பிரின் கார்டன் 1-வது தெரு சந்திப்பில் நேராக நியு ஆவடி சாலை வழியாக செல்லலாம். (ஆஸ்பிரின் கார்டன் 1-வது தெருவை நோக்கி இடது புறம் திரும்ப அனுமதியில்லை.)
  • கீழ்பாக்கம் கார்டன் சாலையிலிருந்து கீழ்ப்பாக்கம் 2-வது தெரு வழியாக ஆஸ்பிரின் கார்டன் நோக்கி செல்ல கூடிய வாகனங்கள், கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை டெய்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து நேரடியாக கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, நியு ஆவடி சாலை மற்றும் ஆஸ்பிரின் கார்டன் முதல் தெரு வழியாக செல்லலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in